"ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு" - "மருத்துவமனைக்கு வர மறுத்து வாக்குவாதம்"

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஓரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்தது.
ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவமனைக்கு வர மறுத்து வாக்குவாதம்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஓரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்தது. ஆரணி டவுன் பெருமாள் கோவில் தெருவில் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை, 4 பெண்கள் உள்ளிட்ட 7பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவகுழு சென்றது. ஆனால் மருத்துவமனைக்கு வர மறுத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே,
நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 211பேர் கொரோனவால் பாதிக்கபட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்