கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்து: இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு

கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்து: இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு
x
கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்