பழிக்கு பழியாக நடக்க இருந்த கொலை - போலீசாரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தம்

மதுரையில் முன்விரோதம் காரணமாக நடக்க இருந்த கொலையை போலீசார் கண்டறிந்து தடுத்து நிறுத்தினர்.
பழிக்கு பழியாக நடக்க இருந்த கொலை - போலீசாரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தம்
x
செல்லூர் பாலம் அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக சென்ற முத்துக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததை அடுத்து, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முத்துக்குமார் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தற்போது அவர் தம்மை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக கூறியுள்ளார். இதனால் பழிக்கு பழி வாங்கும் வகையில், தம்மை கொலை செய்யும் முன்பாக அவரை தாம் கொலை செய்ய சென்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========

Next Story

மேலும் செய்திகள்