19 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 34 ஆண்டு சிறை-மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
கடனை திருப்பி தரமுடியாத இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தவருக்கு, 34 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், கடந்த 2010-ம் ஆண்டு, 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை. இதனால் அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதோடு, தனது நண்பவர் ரவி என்பரையும் பாலியல் பலாத்காரம் செய்யச்சொல்லி, வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த வழக்கில், ரவி, இறந்து விட்டநிலையில், சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 13 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Next Story