கொலைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடை - கொலை நடந்த இடத்தில் பூஜை

மதுக்கடை வாசலில் தலையில் கல்லை போட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்தில் மதுக்கடை ஊழியர்கள் சூடமேற்றி பூஜை செய்துள்ளனர்.
கொலைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடை - கொலை நடந்த இடத்தில் பூஜை
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சரவணன் என்பவர் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சின்னாளபட்டியை சேர்ந்த கோபி என்பவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.   மது பாட்டில் வாங்கி வரும் போது அதனை பறித்துகொண்டதால், இந்த கொலை நடந்த‌தாக விசாரணையில் தெரிய வந்த‌து. இந்த நிலையில், மீண்டும் மதுக்கடையை திறப்பதற்கு முன், ஊழியர்கள் கொலை நடந்த இடத்தில் கதம்பம் பூமாலை போட்டு, சூடம் ஏற்றி பூஜை செய்தனர். அதன் பிறகு வியாபாரம் தொடங்கியது. வாடிக்கையாளர்களும் ஒருவித அச்சத்துடனே வந்து மது வாங்கி சென்றனர். 

------------

Next Story

மேலும் செய்திகள்