ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நில விவகாரம் : "தற்போது நிலத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" - பணிகளுக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தமிழக அரசால், வழங்கப்பட்ட நிலத்தை, கையகப்படுத்த ஆட்சியர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தமிழக அரசால், வழங்கப்பட்ட நிலத்தை, கையகப்படுத்த ஆட்சியர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் அந்த இடத்தில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாக கூறினார். இதையடுத்து, அந்த பணிகளுக்கும் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story