"முதலமைச்சரை விமர்சித்த தணிகாசலம் மீதான குண்டர்சட்டம் ரத்து இல்லை" - சென்னை உயர் நீதிமன்றம்
தணிகாசலத்தின் கொரோனா தடுப்பு மருந்து விண்ணப்பம் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தணிகாசலத்தின் கொரோனா தடுப்பு மருந்து விண்ணப்பம் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசின் கொள்கை முடிவை எடுக்கக்கூடிய முதலமைச்சரை அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், குண்டர் சட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது என வழக்கை ஒத்தி வைத்தனர்.
Next Story