கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது - கைதானவர்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவை

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கியிருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது - கைதானவர்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவை
x
சென்னை, பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கியிருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவொற்றியூரைச் சேர்ந்த பரட்டை என்கிற அஜித்குமார், பொழிச்சலூரை சேர்ந்த கருணாகரன்,  காட்டூரை சேர்ந்த வினித், ராகேஷ், மீஞ்சூரைச் சேர்ந்த  கோகுல், கரண் ஆகியோர் என தெரிய வந்தது.  அவர்கள் மீது பல காவல் நிலையங்களில் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தப்பியோடிய, பெருங்களத்தூரை சேர்ந்த ரியாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்