அரசு மதுபானக் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளை - சுவற்றில் துளையிட்டு சென்று மதுபானங்களை திருடியது அம்பலம்

விழுப்புரம் அருகே போதும் என்ற மனத்துடன் கொள்ளையன் ஒருவர் தனக்கு தேவையான விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே எடுத்துச் சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது.
அரசு மதுபானக் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளை - சுவற்றில் துளையிட்டு சென்று மதுபானங்களை திருடியது அம்பலம்
x
விழுப்புரம் அருகே போதும் என்ற மனத்துடன் கொள்ளையன் ஒருவர் தனக்கு தேவையான விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே எடுத்துச் சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வடதரம் பகுதியில் விவசாயம் நிலத்திற்கு நடுவே அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. புதிதாக செயல்பட்டு வரும் அந்த கடையில் ஏராளமான மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே சென்ற மர்மநபர், அங்கிருந்த மதுபானங்களை பார்த்த பிறகும் நின்று நிதானமாகவே தன் கைவரிசையை காட்டியுள்ளார். கடையின் உள்ளே சுமார் 14 லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதுபாட்டில்கள் இருந்த போதிலும் தனக்கு தேவையான பாட்டில்களை தேடித் தேடி எடுத்துள்ளார் அந்த பலே கொள்ளையன்... 

காஸ்ட்லி சரக்கு என்பது மட்டுமே அவரது கவனமாக இருந்த நிலையில் குறிப்பிட்ட சில பாட்டில்களை மட்டுமே எடுத்துச் சென்றார் அவர். இதன் மட்டும் வெறுமனே 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. பிராந்தி, விஸ்கி, ரம், பீர் என ஒவ்வொன்றிலும் ரகம் ரகமாக வெரைட்டியாக திருடிச் சென்றிருக்கிறார் அந்த நபர். கடையை திறக்க வந்தவர்கள் சுவற்றின் துளையை பார்த்து அதிர்ந்து போய் உள்ளே பார்த்தால் குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே திருட்டு போயிருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுஒரு புறம் என்றால் விவசாய நிலத்திற்கு நடுவே உள்ள இந்த கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடை அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சூழலில் தான் கடையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. திருட்டு சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்