டிரைலர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்

சென்னையில் ஏற்றுமதி இறக்குமதிக்காக சென்னை துறைமுகத்திற்கு கண்டைனர் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் டிரைலர் லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
டிரைலர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
x
சென்னையில் ஏற்றுமதி இறக்குமதிக்காக சென்னை துறைமுகத்திற்கு  கண்டைனர்  பெட்டிகளை ஏற்றிச்செல்லும் டிரைலர் லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ஊரடங்கு காலத்தில் ஐந்து மாதமாக லாரி ஓடாத நிலையில், விதிக்கப்பட்டுள்ள சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட டிரைலர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்