ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல் இலவச முக கவசங்கள்...
ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல் இலவச முக கவசங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க அரசு செய்துள்ளது. அதன்படி, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர்களுக்கு தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட உள்ளது. அவை, மறு பயன்பாடு செய்யக் கூடிய துணி முக கவசங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலவச முக கவசங்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.
Next Story