ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பிறை தென்பாடாத காரணத்தால், ஆகஸ்ட் 1 -ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஹஜ் பெருநாள் எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
Next Story