"மின்கட்டண விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் தேவையா?" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி
மின் கட்டணம் குறித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது, நீதிமன்ற அவமதிப்பாக கூட இருக்கலாம் என்றும், ஸ்டாலின் கவனமாக ஆர்ப்பாட்டம் செய்வது நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் குறித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது, நீதிமன்ற அவமதிப்பாக கூட இருக்கலாம் என்றும், ஸ்டாலின் கவனமாக ஆர்ப்பாட்டம் செய்வது நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவேற்காடு, கோலடி ஏரி தூர் வாரும் பணியை ஆய்வு செய்த அவர், பருத்திப்பட்டு ஏரியைப் போல கோலடி ஏரியும் சுற்றுலா மையமாக மாற்றப்படும் என கூறினார். மேலும், மின்கட்டண விவகாரத்தில், நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார்
Next Story

