மின்கட்டணம் - சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம்

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் - சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம்
x
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அளித்துள்ள அறிக்கையில், 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு, 2 மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மின்நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி, மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கணக்கீடு செய்யும் போது, தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, தொகை கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்