சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146

சென்னையில் கொரோனாவிற்கு 14 ஆயிரத்து 146 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146
x
அதன்படி அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 199 பேரும், அண்ணா நகரில் ஆயிரத்து 560 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 497 பேர், ராயபுரத்தில் ஆயிரத்து 214 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

* அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 164 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து ஆறு பேர், திரு.வி.க.நகரில் 998 பேர், அம்பத்தூரில் 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* வளசரவாக்கம் மண்டலத்தில் 914 பேருக்கும், திருவொற்றியூர் மண்டலத்தில் 608 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூரில் 508 பேரும், சோழிங்கநல்லூரில் 464 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

* மாதவரத்தில் 438 பேருக்கும், பெருங்குடியில் 353 பேருக்கும்,
மணலி மண்டலத்தில் 280 பேரும் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்