சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
x
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் அஞ்சலை முகர்ஜி. இவரது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்த மர்ம கும்பல் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளைடியத்து சென்றது. இதேபோல் அடுத்தடுத்த 5 வீடுகளிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்பட்டது. ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம், நகைகள், பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில் காரில் வந்த கும்பல் ஒன்று இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்