சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பெரியார் சிந்தனைகள் நீக்கம் - மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பெரியார் சிந்தனைகள் நீக்கப்பட்டதற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பெரியார் சிந்தனைகள் நீக்கம் -  மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்
x
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.பி.எஸ்.இ. மாணவர்களின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்து,  தந்தை பெரியார் சிந்தனைகள், மா.போ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் 'மங்கையராய்ப் பிறப்பதற்கே' எனும் பாடமும் நீக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன என வைகோ சுட்டிக்காட்டி உள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும்,உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பா.ஜ.க. அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது என்றும், நாட்டின் பன்முகத் தன்மையை சுக்கு நூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்