தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி
x
தஞ்சை சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை - விவசாயிகள் மகிழ்ச்சி 


தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இரவு நேரத்தில் விட்டுவிட்டு பெய்த மழையால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வாடிய விவசாயிகள், மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திருச்சியில் கனமழை - பாலக்கரை, காஜாமலை, உறையூர் பகுதிவாசிகள் மகிழ்ச்சி


திருச்சியில் ஒருமணி நேரத்துக்கும் மேல், இடி - மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், பாலக்கரை, கண்டோன்மென்ட், தில்லைநகர், பீமநகர், கே.கே.நகர், காஜாமலை, விமான நிலையம், உறையூர்  பகுதிகளில் பெய்த மழை, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பாணாதுறை, தாராசுரம், உள்ளூர், கொரநாட்டு கருப்பூர் பகுதியில் மழை 

கும்பகோணத்தில் நான்கு மணி நேரத்துக்கும் மேல் மழை வெளுத்து வாங்கியது. பாணாதுறை, தாராசுரம், உள்ளூர், கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர். வீதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்

சூறைக்காற்றுடன் கொட்டிய மழை - மின்தடை ஏற்படுத்தி பாதுகாப்பு


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால், மின்தடை ஏறப்ட்டது. கடாரங்கொண்டான், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம், பெரிய வளையம், உட்கோட்டை, ஆயுதங்களம் பகுதிகளில் வீசிய காற்றால், மின்கம்பிகளில் மரங்கள் விழுந்தன

ஆடுதுறை, கதிராமங்கலம்,  திருப்புவனம் பகுதியில் நல்ல மழை


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆடுதுறை, கதிராமங்கலம், வேப்பத்தூர், திருப்புவனம், திருப்பனந்தாள் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திருவிடைமருதூர் வீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புவனகிரி, சிவக்கம், முகையூர், லால்பேட்டை, நெடுஞ்சேரி, கூடுவெளிசாவடி, காட்டுமன்னார்கோவில், பெருங்காலூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது

மேலூர், கீழையூர், நாவினிபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் மழை


மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், நாவினிபட்டி, நரசிங்கம்பட்டி, எட்டிமங்கலம், திருவாதவூர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது

Next Story

மேலும் செய்திகள்