"கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடர்ந்து நகை கடன் வழங்க வேண்டும்" - கே. பாலகிருஷ்ணன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடர்ந்து நகை கடன் வழங்க வேண்டும் - கே. பாலகிருஷ்ணன்
x
கூட்டுறவு வங்கிகள் மூலம்  குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகை கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்