முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்