தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 66 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 1140 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று 2ஆயிரத்து 79 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 24 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 277 ஆக இருக்கிறது. 16 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்