கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுதியுள்ளார்.
கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கோரிக்கை
x
தொடர் ஊரடங்கால், மக்களுக்கு வாழ்வாதார இழப்பும்,  வாழ்க்கையில் பெரும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாவட்டங்களில் கடுமையான கொரோனா தொற்றும், மக்களை திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்து சோதனைகள் முலம் மிரட்டி வருவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக தமிழக அரசு செயல்பட்டதால்,  பல மாவட்டங்களும் கடுமையான கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பல்துறை வல்லுநர்களின் கருத்துரைகளை கேட்டு, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக தாம் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற  முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்