போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளிப்பு - கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இளைஞர் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் என்பவர் வந்துள்ளார்.
x
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் என்பவர் வந்துள்ளார். அங்குள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர் முகிலன், போலீசார் முன்னிலையிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்