"கூடுதலாக பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொள்முதல்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரசிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரசிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும், இதுவரை 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
"மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும்" என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்