நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை
x
திருப்போரூரில் வசிக்கும் இதய வர்மனுக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம் குமார் என்பவரும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செங்கோடு கிராமத்தில் உள்ள சுமார் 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம் குமார் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு செல்வதற்கு பாதை அமைக்க சங்கொதி அம்மன் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலத்தை பார்வையிட இமயம் குமார் சில ரவுடிகளுடன் சங்கொதி அம்மன் கோயில் அருகே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த திருப்போரூர் எம்.எல்.ஏவின் தந்தை லட்சுமிபதியுடன் இமயம் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ரவுடிகள் லட்சுமிபதியை அரிவாளால் வெட்டினர். இதனிடையே தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து லட்சுமிபதி  சுட்டுள்ளார், இதில் எதிர்பாராத விதமாக சீனிவாசன் என்பவர் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். காயமடைந்த லட்சுமிபதி கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்