சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்பு
சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சமீப காலமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணி மூலம் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி உள்ள ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களுக்கு, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அருகில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story