இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் மாநிலம் முழுவதும், எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது ஞாயிறான இன்று, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
Next Story