நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தலா 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் அடையாறு தனியார் மருத்துவமனைகளில், 6 பேர் உட்பட 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story