நீலகிரியில் ரூ.447 மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி - காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
x
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை 10 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், 11 வது மருத்துவ கல்லூரியாக 447 கோடி ரூபாய், மதிப்பீட்டில் நீலகிரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த புதிய மருத்துவக் கல்லூரியால், தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்றும், மொத்த எண்ணிக்கை, 5 ஆயிரத்து 250 இடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்