கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெதர்லாந்து  நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரு முகவரிக்கு இரண்டு பார்சல்கள் வந்திருந்தன. இதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பார்சலுக்குள் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 540 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்ற சுங்க இலாகா அதிகாரிகள், அங்கிருந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். கடந்த 15 நாட்களில் ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக போதை பொருள் பிடிபட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்