பட்டுப்போன மரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் - 1 மணி நேரம் போராடி அணைத்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இடையபொட்டல் பகுதியில் தனியார் கார் வாகன நிறுத்துமிடம் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இடையபொட்டல் பகுதியில் தனியார் கார் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்த வாகன காப்பகத்தின் பின்புறத்தில் காய்ந்த மரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் அருகிலிருந்த பொதுமக்கள் தனியார் வாகன காப்பகத்திற்குள் தீ பரவாமல் மள மள வென எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 70க்கும் மேற்பட்ட கார்கள் தப்பின
Next Story