மாற்றுத்திறனாளி தம்பதிக்கு முக கவசம் வழங்கிய ஆட்சியர்
வாணியம்பாடி பகுதிகளில் திடீரென ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன், சாலையில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரை அழைத்து, முககவசம் மற்றும் கையுறை வழங்கினார்.
வாணியம்பாடி பகுதிகளில் திடீரென ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன், சாலையில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரை அழைத்து, முககவசம் மற்றும் கையுறை வழங்கினார். அதன் பின் வாணியம்பாடி அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை அதிகாரிகளுக்கு தெரியாமல் அவர் ஆய்வு செய்தார்.அப்போது, அந்த பகுதியில், முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து முக கவசம் வழங்கி எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.
Next Story