23 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
23 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நாளை ஆலோசனை
x
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஏற்கனவே 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அடுத்தகட்டமாக காணொலி காட்சி மூலம் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை புதன்கிழமை மாலை 4 மணி அளவில் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்