"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்
x
மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை, நரிமேடு பகுதியில், கோபிநாத் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில், கடந்த ஆண்டு, ஆயிரத்து 500 சவரன் தங்க நகை மற்றும் ஒன்பது லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டும், குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை. இந்த நிலையில்,  நகை அடமானம் வைத்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள், அடகு கடை முன்பு கண்ணீர் மல்க கதறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், நம்பிக்கை அளித்ததன் பேரில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்