"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
சென்னையில், பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சமூக விலகலுடன் கூடிய  மீன்கடைகள் அமைப்பது தொடர்பாக, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர ஆணையர் பிரகாஷ், காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மண்டல துணை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மார்க்கெட்டிற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்