ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது - அமைச்சர் தங்கமணி
ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம்.
கொரோனா காலத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று மின்சார அளவை கணக்கெடுப்பதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு, முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை, அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிப்பதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால், மின்சார பயன்பாடு உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
* இது இயல்பு தான் என்று கூறியுள்ள அமைச்சர்,
இதனை பயன்டுத்தி, கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கிறார்கள் என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி விஷம பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
* மின்துறை அமைச்சர் எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,கேள்வி எழுப்பியுள்ளதாக கூறிய தங்கமணி,
* கொரோனா காலத்தில் தான் நடத்திய ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கையில் வந்த செய்திகளில் படித்து தெரிந்து கொள்ளலாம் என பதில் அளித்துள்ளார்.
Next Story