பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து விற்பனை - 2 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னையில் மது கலந்த பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து விற்பனை - 2 பேரை கைது செய்தது காவல்துறை
x
சென்னையில் மது கலந்த பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீராம் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும், விற்பனை செய்வதாகவும், கோட்டூர்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சோதனையிட்டபோது, வாடகை வீட்டில் வசிக்கும் சீனிவாசன் என்பவர், பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து, மண்பாணையில் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த வீட்டு உரிமையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்