திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு
x
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.  சீருடை இல்லாமல், சைக்கிளிங் செல்லும் ஆடை, தலையில் ஹெல்மெட், முக கவசம் அணிந்திருந்த டிஐஜி ஆனி விஜயாவை, மாத்தூர் சோதனைச் சாவடியில் இருந்த போலீசாருக்கு அடையாளம் தெரியவில்லை. அவருடன் சென்ற காவலர்கள், வந்திருந்திருப்பது டிஐஜி என்று சொன்ன பிறகே, அடையாளம் கண்டு கொண்டனர். சோதனைச் சாவடி மட்டுமல்லாது, மாத்தூர் காவல் நிலையத்திலும் டிஐஜி ஆய்வு மேற்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்