குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பறிமுதல் செய்த வாகனத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா, ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளார்.
இதனால் அவரது இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், குடிபோதையில் எளாவூர் பஜாரை ஒட்டி உள்ள செல்போன் டவர் மீது ஏறி, தனது இரு சக்கர வாகனத்தை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இறைவனுக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை அவரிடம் ஒப்படைத்ததை அடுத்து, ராஜா வீட்டிற்கு சென்றார்
Next Story