"தமிழகம் முழுவதும் 60599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்" - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகப்படியான, 13 லட்சத்து 6 ஆயிரத்து 884 பரிசோதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளதாகவும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 60599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர் - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகப்படியான, 13 லட்சத்து 6 ஆயிரத்து 884 பரிசோதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளதாகவும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 40 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்துள்ளதாக கூறினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் மட்டும் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில், 18 பேர் குணமடைந்து உள்ளதாக கூறினார். இதற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்