விழுப்புரம் : மேலும் 57 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டம், கொல்லியங் குணத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள பயிற்சி பெண் காவலர்கள் 3 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் : மேலும் 57 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
விழுப்புரம் மாவட்டம், கொல்லியங் குணத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள பயிற்சி பெண் காவலர்கள் 3 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள 326 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.  நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன அடுத்து அவர்கள் ​ே​அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்று, காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்