சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் - 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் - 2  சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
x
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை நடத்திவரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்