செங்கல்பட்டு : கந்துவட்டி கொடுமை - விவசாயி தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அடுத்த கருங்குழி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம், ஜெகநாதன் என்ற விவசாயி 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு : கந்துவட்டி கொடுமை - விவசாயி தற்கொலை
x
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அடுத்த கருங்குழி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம், ஜெகநாதன் என்ற விவசாயி 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அதில், ஒன்றரை லட்சம் ரூபாய்  திருப்பி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதமாக ஜெகநாதன் வட்டி கட்டாத நிலையில், ராஜேந்திரன் தினமும் வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்