கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
x
கள்ளக்குறிச்சியில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.  சென்னை தலைமை செயலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்​து கொண்டு, காணொலி காட்சி மூலம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.  கள்ளக்குறிச்சியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறுவங்கூர் சமத்துவபுரம் எதிரில் 700 படுக்கை வசதிகளுடன், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்