போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி
x
இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம்  திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.படை வீரர்களுக்கான உரையில், படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், 'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற இன்னொரு குறளையும் அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம் என தெரிவித்துள்ளார். பசியும், நோயும், பகையும் இல்லாத  நாடுதான் சிறந்த நாடு என அந்த குறளுக்கு பொருள் குறிப்பிடப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்