"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
எந்தவொரு குற்ற சம்பவத்திலும், முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்த பிறகே குற்றவாளி உறுதி செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த நடைமுறையே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பின்பற்றப்படுவதாக விளக்கியுள்ள ராஜேந்திரபாலாஜி,சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

* ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து, காவல்துறையையும், தமிழக அரசையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக, அறிக்கையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

* சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழக அரசு தவறிழைத்தது எங்கே ? எங்கே நீதி மறுக்கப்பட்டது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்