கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் புதிய கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் ஆறாம் கட்ட அகழாய்வு பணியில், இரண்டு அடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் புதிய கண்டுபிடிப்பு
x
பல ஆண்டுகளுக்கு முன்னர், அங்கு செங்கல் தொழிற்சாலை இருக்க வாய்ப்பிருக்கலாம் என, தொல்லியல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், 40 லட்ச ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இங்கு இதுவரை இரு வண்ண பானைகள், சிறிய வகை உலை கலன், பாசி, பெரிய விலங்கின் எலும்பு, இணைப்பு குழாய் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. மேலும் 2 ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட நீண்ட தரைதளத்தின் தொடர்ச்சியும் 6 ம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்டது. 3 அடி ஆழத்தில் இந்த தொடர்ச்சி கண்டறியப்பட்டதை தொடர்ந்து அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மேலும் இதன் தொடர்ச்சியை கண்டறிய ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தனர். செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்ட அதே குழியில் ஆறு அடி ஆழத்தில் புதிய தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தரை தளத்தில் ஒரே அளவிலான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கற்கள் பிடிமானத்திற்காக வெண்மை நிற மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செங்கல் மீது மற்றொரு செங்கல் வைத்து இந்த தரை தளம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரை தளத்தின் தொடர்ச்சி தென்புறம் நீண்டுள்ளது. அடுத்து தென்புற அகழாய்வில் குழிகள் தோண்டும் போது தொடர்ச்சி கிடைக்க வாய்ப்புண்டு என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கிடைத்த செங்கல் கட்டுமானம் தொழிற்சாலை போன்ற அமைப்பை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து தரை தளங்கள் கிடைத்து வருவதால் இங்கு தொழிற்சாலை இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்