மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் - உடனடியாக விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரி சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரி சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, தமிழக மருத்துவ கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், 50 சதவீதத்தை OBC பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 9ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்குக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பதால், OBC பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
Next Story