தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு தலைவர் பதவி - ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு தலைவர் பதவி - ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம்
x
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசால் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி யின் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார் . 10 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டியிருப்பதால், காலியாக இருந்த கட்டண நிர்ணய குழுவின் தலைவர் பதவிக்கு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்