கன்னியாகுமரி : மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் திருமணத்திற்காக மணமக்கள் வீட்டார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவில் வந்தடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் திருமணத்திற்காக மணமக்கள் வீட்டார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவில் வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் திருமண நிகழ்ச்சி மாவட்டத்தின் எல்லையில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனிடையே, மணமகளின் தாயாருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகிறனர்.
Next Story